லெனின் (Vladimir Lenin)
தோழர்
லெனின்
Vladimir Ilitch Lénine
உலகில்
முதல் சோசலிச சமூகத்தைப்
படைப்பதில் பெரும் பங்காற்றிய
லெனின் மறைந்து 91
ஆண்டுகள்
உருண்டோடிவிட்டன.
எனினும்
உழைக்கும் மக்களுக்கும்
அவர்களின் விடுதலைக்கு
போராடும் பொதுவுடமை போராளிகளுக்கும்
லெனின் வாழ்வும் பணியும்
இணையில்லா வழிகாட்டியாக
திகழ்கிறது.
பொதுவுடமைக்
கோட்பாடுகளின் பல முக்கிய
அம்சங்களை லெனின் செழுமைப்படுத்தினார்.
காலத்திற்கேற்ப
புதிய கோட்பாடுகளையும்
உருவாக்கினார்.
அவற்றில்
மிக முக்கியமான ஒன்று தொழிலாளி
வர்க்கத்தின் கட்சி பற்றிய
கோட்பாடுகள் ஆகும்.
1924-ஆம்
ஆண்டு ஜனவரி 27-ம்
நாள் மாலை நேரம்.
அமெரிக்காவின்
பெரிய நகரங்களில் தொழிலாளர்கள்
வேலை நிறுத்தம் செய்து வீதிகளில்
ஊர்வலமாக வருகின்றனர்.
அவர்களின்
கையில் சிவப்பு நிறக் கொடி
ஒரு மனிதரின் உருவப்படத்தையும்
சுமந்தபடி சோகமாக செல்கின்றனர்.
லண்டன்
மாநகரில் தொழிலாளர்கள்
ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
பிரான்சிலும்,
ஜெர்மனியிலும்
கூடி இது போன்ற ஊர்வலங்கள்
நடக்கின்றன.
அந்த
தொழிலாளர்கள் கண்ணீர்
சிந்துகின்றனர்.
இந்தியாவிலும்
சீனாவிலும் கூட சில இடங்களில்
இந்தக் காட்சிகள் நடக்கின்றன.அந்த
1924-ஆம்
ஆண்டு ஜனவரி 27-ம்
நாள்,
உலகம்
முழுவதும் உள்ள உழைக்கும்
மக்கள் கண்ணீர் சிந்திய நாள்.
அவர்கள்
அனைவரின் கவனமும் சோவியத்
ரசியாவை நோக்கி இருந்தது.
சோவியத்
ரசியா அன்றைய தினம் மயான
அமைதியில் கழிந்தது.
ஒவ்வொரு
வீடும் இழவு வீடு போல
காட்சியளித்தது.
பெரியவர்களும்,
குழந்தைகளும்
அழுது தீர்த்தனர்.
பெண்கள்
ஒப்பாரி வைத்தனர்.
ஆண்கள்
கனத்த இதயத்துடன் ஏக்கப்
பெருமூச்சு விட்டனர்.
கடுமையான
குளிர் வாட்டியது.
வீதிகள்
பனிப் பாளங்களால்
மூடப்பட்டிருந்தன.சரியாக
மாலை 4.00
மணி
வானொலியில் ஒரு அறிவிப்பு
வந்தது.
“எழுந்து
நில்லுங்கள் தோழர்களே!
தோழர்
லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.”
சோவியத்
ரசிய மக்கள் அனைவரும் எழுந்து
நின்றனர்.
அமெரிக்க
ஐரோப்பிய தொழிலாளர்கள் எழுந்து
நின்றனர்.
ஆசிய
ஆப்பிரிக்க நாடுகளின்
தொழிலாளர்கள் எழுந்து நின்றனர்.

ஐந்து
நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உலக
மக்களால் நேசிக்கப்பட்ட
மாபெரும் தலைவர் லெனினுடைய
சவ அடக்கம் இப்படித்தான்
நடைபெற்றது.
உலகமே
எழுந்து நின்று அவருக்கு
இறுதி விடைகொடுத்து அனுப்பியது.
லெனினுக்கு
முன்னரும் சரி,
அவருக்குப்
பின்னரும் சரி,
எந்தத்
தலைவருக்கும் இந்த மரியாதை
கிடைக்கவில்லை.
எந்த
நாட்டுத் தலைவராக இருந்தாலும்
அவருடைய மரணம் அந்த நாட்டு
மக்களை மட்டுமே பாதிக்கும்.
ஆனால்
லெனினுடைய மரணம் உலகையே
குலுக்கியது.
சோவியத்
ரசியாவின் தலைவருக்காக உலகமே
ஏன் அழ வேண்டும்?
அப்படி
என்ன
எந்த
நாட்டை எடுத்துக் கொண்டாலும்
அங்கே பணக்காரர்கள் இருப்பார்கள்.
அதுபோலவே
ஏழைகளும் இருப்பார்கள்.
ஒருவன்
பணக்காரன் என்றால்,
100 பேர்
ஏழைகள்.
இந்த
ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி
பணக்காரர்கள் கொள்ளை லாபம்
சம்பாதிப்பார்கள்.
உழைக்கும்
மக்கள் மேலும் மேலும் வறுமையில்
வாடிக்கிடப்பார்கள்.
ரசியாவிலும்
ஒரு காலத்தில் மக்கள் அப்படித்தான்
துன்பத்தில் உழன்றனர்.இந்த
அநியாயத்தை ஒழித்துக்
கட்டியவர்தான் லெனின்.
அவருடைய
தலைமையில் 1917-ஆம்
ஆண்டு நவம்பர் 7-ம்
தேதி நடைபெற்ற புரட்சியினால்
தொழிலாளர்கள்,
விவசாயிகள்
ஆட்சி மலர்ந்தது.
உலகில்
முதன்முறையாக தொழிலாளர்கள்
ஆட்சியில் அமர்ந்தனர்.
அந்த
தொழிலாளர்களின் ஆட்சிதான்
உலகில் எங்குமே நடக்காத
சாதனைகளை நிகழ்த்தியது.
மனிதனை
மனிதன் சுரண்டும் கொடுமைக்கு
முடிவு கட்டப்பட்டது.
தேசத்தின்
வளங்களை ஒரு சிலர் மட்டும்
அனுபவிப்பது முடிவுக்கு
வந்தது.
அவை
அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டது.
வயது
வந்த அனைவருக்கும் திறமைக்
கேற்ற வேலையும்,
வேலைக்கேற்ப
ஊதியமும் வழங்கப்பட்டது.
அனைவருக்கும்
இலவச கட்டாயக் கல்வி அளிக்கப்பட்டது.
சமத்துவச்
சமூகம் படைக்கப்பட்டது.இவை
அனைத்தும் லெனினுடைய தலைமையில்
நடந்தது.
இதன்
மூலம் தன்னுடைய நாட்டில்
வறுமையை ஒழித்துக் கட்டினார்.
மற்ற
நாடுகளிலுள்ள உழைக்கும்
மக்களின் கவனம் சோவியத்
ரசியாவை நோக்கித் திரும்பியது.
லெனினுடைய
வழியைப் பின்பற்றினால் மட்டுமே
தங்களின் வறுமை ஒழியும் என்று
அவர்கள் நம்பினர்.
தங்களின்
நல்வாழ்விற்காக போராடத்
தயாராக இருந்த உலகத்
தொழிலாளர்களுக்கு லெனின்
சரியான வழி காட்டினார்.
ஆனால்
ரசிய மக்களுக்குக் கிடைத்த
வெற்றி உலகத்திலுள்ள அனைவருக்கும்
கிடைப்பதற்கு முன்னரே அவர்
மரணமடைந்து விட்டார்.இதனால்தான்
அவருடைய மரணத்துக்கு உலகமே
அழுதது.
உலகின்
ஆறில் ஒரு பகுதி நிலப்பரப்பில்
வறுமையை ஒழித்தவர் என்ற
நன்றியும்,
மீதி
நிலப்பரப்பில் அதை நிறைவேற்றும்
முன்னரே இறந்து விட்டாரே
என்ற துக்கமும்தான் உலகத்
தொழிலாளர்களை கண்ணீர் சிந்த
வைத்தது.
லெனின்
1870-ஆம்
ஆண்டு ஏப்ரல் 22-ம்
தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில்
பிறந்தார்.
அவருடைய
தந்தையான இல்யா உல்யனாவ்
மாவட்டக் கல்வி அதிகாரியாக
பணி புரிந்தார்.
நேர்மையான
மனிதர்.
தாயார்
மரியா உல்யானவ் அன்பே வடிவானவர்.
லெனினுடைய
இயற்பெயர் விளாடிமிர் உல்யானவ்.
அவருடன்
உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர்.
இரண்டு
சகோதர்கள்,
மூன்று
சகோதிரிகள் லெனினுடைய பெற்றோர்
தங்கள் குழந்தைகளை
அறிவுடையவர்களாகவும்,
பண்புடையவர்களாகவும்
வளர்த்தனர்.
மேலும்
தங்கள் சக மனிதர்களை நேசிக்கவும்
கற்றுக் கொடுத்தனர்.
நேர்மையான
அதிகாரியான தங்கள் தந்தையின்
மூலம் நியாயத்திற்காக போராடும்
குணத்தைப் பிள்ளைகள் பெற்றனர்.
தாயார்
இனிமையாகப் பாடுவார்.
ஒவ்வொரு
இரவும் அருமையான கதைகளைச்
சொல்வார்.சிறு
வயது லெனின் மிகுந்த குறும்புகாரர்.
தன்னுடைய
வீட்டுப்பாடங்களை விரைவில்
முடித்துவிட்டுக் குறும்பு
செய்யத் தொடங்குவார்.
அவருடைய
குறும்புகளால் வீடு எந்நேரமும்
கலகலப்பாக இருக்கும்.
எதையும்
விரைவாகப் புரிந்து கொள்ளும்
திறன் கொண்டவரான லெனின்
படிப்பிலும் விளையாட்டிலும்
முதலிடத்தில் இருந்தார்.
அவர்தன்
அண்ணனான அலெக்சாண்டர் மீது
மிகுந்த பாசமும்,
மதிப்பும்
கொண்டிருந்தார்.
அலெக்சாண்டருக்கு
அறிவியல் ஆராய்ச்சியில்
ஆர்வம் அதிகம்.
சகோதரர்கள்
இருவரும்,
உலகம்
எப்படி தோன்றியது?
உயிர்
எப்படி தோன்றியது?
போன்ற
கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க
விவாதிப்பார்கள்.
நிறைய
புத்தகங்கள் படித்ததன் விளைவாக
அலெக்சாண்டருக்கு ஏராளமான
விசயங்கள் தெரிந்திருந்தன.
எதிர்காலத்தில்
தன் அண்ணனைப் போலவே தானும்
அறிவாளியாக வேண்டுமென்று
லெனின் தீர்மானித்துக்
கொண்டார்.
அதற்காக
கையில் கிடைத்த புத்தகத்தை
எல்லாம் படித்தார்.இப்படி
மகிழ்ச்சியாகப் போய்க்
கொண்டிருந்த வாழ்வில் முதல்
இடி விழுந்தது.
திடீரென
ஒருநாள் தந்தை இறந்து போனார்.
அந்த
அடியிலிருந்து மீள்வதற்குள்
அடுத்த இடி தாக்கியது.
ரசியாவில்
கொடுங்கோலாட்சி நடத்திக்
கொண்டிருந்த ஜார் மன்னனைக்
கொல்ல முயற்சி செய்ததற்காக
அலெக்சாண்டருக்கு மரண தண்டனை
விதிக்கப்பட்டது.
இந்த
செய்தியால் குடும்பம்
நிலைகுலைந்து போனது.
அலெக்சாண்டருக்கு
மரண தண்டனை நிறைவேற்றிய நாளில்
லெனினுக்குப் பள்ளியில்
இறுதித் தேர்வுகள் நடைபெற்றது.
அந்தக்
கொடூரமான துக்கத்தினால்
லெனின் துவண்டு போகவில்லை.
தேர்வு
முடிவுகளில் மாவட்டத்தில்
முதல் மாணவனாகத் தேறினார்.
இது
அவருடைய உருக்கு போன்ற
மனவலிமைக்கு ஒரு சான்று.
லெனின்
தன்னுடைய உயர் படிப்பைப்
தொடர கசான் என்ற நகரின் பல்கலைக்
கழகத்தில்
சேர்ந்தார்.
அந்தக்
காலத்தில் ஜார் மன்னனுக்கு
எதிராக மாணவர்கள் போராடிக்
கொண்டிருந்தனர்.
ஜார்
தேசத்தின் வளங்களை சூறையாடி
ஆடம்பரமாக செலவு செய்தான்.
மக்களையோ
வறுமையில் தள்ளினான்.
அவர்களின்
உரிமைகளைக் காலில் போட்டு
மிதித்தான்.
மன்னன்
சட்டத்திற்கு உட்பட்டு
நியாயமாக ஆட்சி நடத்த வேண்டும்
என்பதே மாணவர்களின்
கோரிக்கை.மாணவர்களின்
போராட்டத்தை வன்முறையால்
ஒடுக்கினான் ஜார்.
மாணவர்கள்
குற்றவாளிகளைப் போல
கண்காணிக்கப்பட்டனர்.
கசான்
பல்கலைக்கழகம் சிறைச்சாலை
போல மாற்றப்பட்டது.
மாணவர்களின்
அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன.
தன்மானமுள்ள
மாணவர்கள் இதை எதிர்க்கத்
தீர்மானித்தனர்.
ஒட்டு
மொத்தமாக பல்கலைக் கழகத்தில்
இருந்து வெளியேறினர்.
லெனினும்
வெளியேறினார்.பல்கலைக்கழகத்தில்
இருந்து வெளியேறிய லெனின்,
ஜார்
ஆட்சியின் கொடுமைகளை அனுபவத்தின்
மூலம் புரிந்துகொண்டார்.
ஒடுக்கப்பட்ட
மக்களுக்காக போராடத்
தீர்மானித்தார்.
வழக்கறிஞர்
தொழிலின் மூலம் அதை செய்யத்
திட்டமிட்டார்.
எனினும்
சட்டக்கல்லூரியில் அவரை
சேர்த்துக் கொள்ள மறுத்தனர்.
லெனின்
இதை ஒரு சவாலாக எடுத்துக்
கொண்டார்.
வீட்டில்
இருந்தே படித்தார்.
நான்கு
வருட சட்டக்கல்வியை ஒன்றரை
ஆண்டில் படித்து முடித்துப்
பட்டம் பெற்றார்.
அதிலும்
மாநிலத்தில் முதலாவதாக.அந்த
மகிழ்ச்சி அடங்குவதற்குள்
மேலும் ஒரு துக்க செய்தி அவரது
தங்கை ஓல்கா நோயினால்
மரணமடைந்தார்.
லெனினுடைய
தாயார் மனமுடைந்து போனார்.
லெனின்
பெத்ரோகிராடு நகரில் வழக்கறிஞர்
தொழில் மேற்கொள்ள சென்றார்.
அவருடைய
குடும்பம் மாஸ்கோ நகரில்
குடியேறியது.
மனிதர்கள்
வாழ்வதற்கு உணவு,
உடை,
இருப்பிடம்
முதலிய ஏராளமான தேவைகள்
பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொரு
தேவையும் ஒவ்வொரு பொருளின்
மூலமே நிறைவேறுகின்றது.
இயற்கையயோடு
போராடித்தான் மனிதன் அந்தப்
பொருட்களை உருவாக்க வேண்டியுள்ளது.
இதையே
உழைப்பு என்கிறோம்.
மனிதர்கள்
உழைப்பதனால்தான் செல்வம்
உண்டாகின்றது.
ஆனால்
அந்த செல்வத்தை ஒரு சிலர்
மட்டுமே சுருட்டிக்கொள்கின்றனர்.
உழைப்பாளிகளுக்கோ
கூலியாக சொற்ப பணமே கொடுக்கப்படுகிறது.
இதுவே
வறுமைக்குக் காரணம்.
உழைக்கும்
மக்கள் இதை புரிந்து கொண்டு
எதிர்த்துப் போராடினால்,
அவர்களை
ஒடுக்குவதற்காக போலீசு,
இராணுவம்,
சிறைச்சாலை,
சட்டம்
போன்றவை பணக்காரர்கள் உருவாக்கி
வைத்துள்ளர்.
இதுவே
அரசு எனப்படுகிறது.
தற்போதுள்ள
அரசு பணக்காரர்களுக்கானது.
வறுமையில்
வாடும் மக்களைச் சுரண்டுவதே
அதன் நோக்கம்.உழைக்கும்
மக்கள் ஒரு புரட்சியின் மூலம்
பழைய அரசையும்,
அநீதியான
சட்டங்களையும் வீழ்த்த
வேண்டும்.
அந்த
இடத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கான
புதிய அரசையும்,
சமத்துவத்திற்கான
சட்டங்களையும் இயற்ற
வேண்டும்.இதுதான்
அந்தப் புத்தகத்தின் சாரம்.
இந்தக்
கருத்துக்கள் கம்யூனிச
தத்துவம் என அழைக்கப்படுகிறது.
அடுத்ததாக
காரல் மார்க்கம் அவருடைய
நண்பர் எங்கெல்சும் எழுதிய
அனைத்து நூல்களையும் படித்து
முடித்தார்.
அதிலிருந்து
ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்ட
தொழிலாளர்களின் புரட்சி
ஒன்றுதான் வழி என்று தீர்மானித்தார்.
அந்தப்
புரட்சிக்காகத் தன் வாழ்க்கையை
அர்ப்பணிக்க முடிவு செய்தார்.
லெனின்
தினமும் இரவு நேரத்தில்
தொழிலாளர்கள் வசிக்கும்
பகுதிகளுக்கு செல்லத்தொடங்கினார்.
தொழிலாளர்
கூட்டங்களில் பேசினார். அதை
ஒரு புரட்சியின் மூலம் மாற்றும்
சக்தி தொழிலாளர்களுக்கு
மட்டுமே உண்டு என்றார்.
இக்கூட்டங்கள்
அனைத்தும் இரகசியமாகவே நடந்தன.
ஏனெனில்
வெளிப்படையாக கூட்டம் நடத்தினால்
ஜாரின் போலீசு அனைவரையும்
சிறையில் தள்ளிவிடும்.லெனினுடைய
பிரச்சாரத்திற்கு நல்ல பலன்
இருந்தது.
அவருடைய
கருத்துக்கள் பெத்ரோகிராடு
நகரத் தொழிலாளர்கள் அனைவரையும்
சென்று அடைந்தன.
தொழிலாளர்கள்
மெதுவாக விழிப்புணர்வு
பெற்றனர்.
தொழிலாளர்கள்
ஒவ்வொரு நாளும் 16
மணிநேரம்
முதலாளிகளுக்கு உழைத்துக்
கொட்ட வேண்டியிருந்தது.
கூலியோ
மிகமிகக் குறைவு.
இதற்கெதிராகப்
போராட்டங்கள் வெடிக்கத்
தொடங்கின.இந்த
போராட்டங்களை வழிநடத்தும்
தலைவர் யார் என்று தெரிந்து
கொள்ள இயலாமல் ஜார் அரசு
மண்டையைச் குடைந்து கொண்டிருந்தது.
லெனின்
மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவரை
கையும் களவுமாகப் பிடிக்க
ஏராளமான உளவாளிகள் அவரைப்
பின்தொடரத் தொடங்கினர்.லெனின்
அவர்களை ஏமாற்றிவிட்டு ரகசிய
கூட்டங்கள் நடக்கும் இடத்திற்கு
சென்றுவிடுவார்.
வலிமையான
உடற்கட்டும் புத்திக் கூர்மையும்
இதற்கு உதவின.
ஒரு
கணநேரத்தில் மாயாஜால வித்தை
போல தங்கள் கண்ணெதிரே லெனின்
தப்பி ஓடுவதைக் கண்டு உளவாளிகள்
மண்டையைப் பிய்த்துக்
கொள்வார்கள். இதுபோல்
பலமுறை உளவாளிகள் ஏமாந்து
போனதுண்டு.
1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லெனினும் அவருடைய தோழர்களும் கைது செய்யப்பட்டனர். ஜார் ஆட்சிக்கு எதிராகப் போராடியதற்காக அவருக்கு நான்கு ஆண்டு கால சைபீரியச் சிறைவாசம் அளிக்கப்பட்டது சைபீரியாவிற்கு அனுப்புவதும் மரண தண்டனை நிறைவேற்றுவதும் ஒன்றுதான். ஏனென்றால் சைபீரியா என்பது ஒரு பனிபிரதேசம். நிலம் எப்போதும் பனியால் மூடியிருக்கும். எந்நேரமும் பனி பெய்யும் பனிப் புயல் வீசும். கடும் குளிர் ஆளை சாகடிக்கும்.
ரசிய அரசு புரட்சியாளர்களை சைபீரியாவிற்கு அனுப்பி விடும்.
அங்கே அவர்கள் குளிரில் விறைத்து இறந்து போவார்கள்.
ஆனால்
சைபீரியக் குளிரை லெனின்
தோற்கடித்தார்.அவருடைய
உறுதியான உடற்கட்டையை
உருக்குலைக்க சைபீரியப்
பனிப் பிரதேசத்தால் இயலவில்லை.
அதுமட்டுமல்ல
லெனின் தான் காதலித்த
கிரூப்ஸ்காயா என்ற பெண்ணைத்
திருமணமும் செய்து கொண்டார்.
லெனினுடன்
சேர்த்து அவரையும் சைபீரியாவிற்கு
நாடு கடத்தியிருந்தது ஜார்
அரசு.
சைபீரியாவில்
கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி
அவர் ஏராளமான புத்தகங்கள்
எழுதினார்.
அவை
ரசியாவில் புரட்சியை எப்படி
நடத்துவது என விளக்கும்
புத்தகங்கள்.
மக்களைத்
திரட்டாமல் புரட்சி சாத்தியமில்லை.
தனது
கருத்துக்களை மக்களிடம்
கொண்டு செல்ல ஒரு பத்திரிக்கை
அவசியம் என்ற முடிவுக்கு
வந்தார்.
அதனை
ரசியாவிற்குள் இருந்து கொண்டு
நடத்த முடியாது.
அரசு
அதை அனுமதிக்காது.
ஆகவே
வெளிநாட்டில் இருந்து ஒரு
பத்திரிக்கையை வெளியிட முடிவு
செய்தார்.
பத்திரிக்கையின்
மூலம் கம்யூனிஸ்ட் கட்சியையும்
உருவாக்கத் தீர்மானித்தார்.
ஏனெனில்
கட்டுக்கோப்பான கம்யூனிஸ்ட்
கட்சி இல்லாமல் புரட்சியை
வழி நடத்தமுடியாது.
1899-இல் லெனின் விடுதலை செய்யப்பட்டார். விரைவில் தான் முன்னரே தீட்டியிருந்த திட்டத்தின்படி ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார். இஸ்கரா என்ற முதல் கம்யூனிச பத்திரிகை வெளிவந்தது.
1899-இல் லெனின் விடுதலை செய்யப்பட்டார். விரைவில் தான் முன்னரே தீட்டியிருந்த திட்டத்தின்படி ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார். இஸ்கரா என்ற முதல் கம்யூனிச பத்திரிகை வெளிவந்தது.

நன்றி
;
தோழர்
சுரன் சுகுமாரன் ....
Comments