Posts

Showing posts from April, 2014

மயன்

Image
மயன் மயன் என்பவர் குமரிக்கண்டத்தின் சடைச்சங்கத்தில் உள்ள சங்கப்பலகையை செய்த சிற்பி . இவரின் சங்கப்பலகையிலேயே அகத்தியம் , ஐந்திறம் போன்ற பழந்தமிழ் இலக்கிய நூல்கள் ஏற்றப்பட்டதாக கணபதி சுதபதி என்ற சிற்பியும் அவரை பின்பற்றுபவர்கள் எழுதிய புத்தகங்களிலும் உள்ளன . பொருளடக்கம் 1 மயன் வரலாறு 2 மயனும் தமிழ்சங்கமும் 3 கலைமூலன் 4 நூல் பதிவுகள் 5 மயனின் முக்கிய நூல்கள் 6 சிற்றம்பலச்சிற்பம் 7 மயனின் சீடர்கள் 8 மயன் முக்கோண விதிக் குறிப்புகள் 9 மேற்கோள்கள் 10 இவற்றையும் பார்க்க 11 உசாத்துணை 12 வெளி இணைப்புகள் மயன் வரலாறு மூலநூல் : பண்டைத்தடயம் மயன் குமரி நாட்டில் பிறந்தவர் . இவரது தாய் கருங்குழலியும் தந்தை திருமூலரும் ஆவர் . மயன் பிறந்தநாள் - தைத்திங்கள் பௌர்ணமி லக்னம் - மகரம் நட்சத்திரம் - பூசம் ராசி - கடகம் மயனும் தமிழ்சங்கமும் மயன் தமிழ்ச்சங்கத்தில் இருந்தவர் என்பதை செந்தமிழ் இயக்கங்கண்டேன் என்ற மயனின் பாடலை வைத்து அறியப்படுகிறது . மயன் சங்கப்பலகை செய்ததை அவைக்களப் பலகை கண்டு அருந்தமி...

லெமூரியா

Image
லெமூரியா 19 ஆம் நூற்றாண்டு மத்தியில் செய்யப்பட்ட இலெமூரியா என்ற புவியியல் புனைக்கோள் , ஆப்பிரிக்க - ஆசிய கண்டங்களின் பாலமாக , நிலப்பரப்பாக இந்து மாக்கடலில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம் என முன்வைக்கப் பட்டது . 20 ம் நூ . முன்னேயே அது கைவிடப் பட்டது . இதனை சிலர் கண்டமாக இருந்த ஒரு பரந்த நிலப்பரப்பு எனவும் கூறுவர் . இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுனர் பிலிப் ஸ்க்லேட்டர் இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்ட நிலப்பாலத்திற்கு லெமூரியா என்று பெயரிட்டார் .[1] சிந்துபாத்தின் கடல் பயன்கள் என்ற திரைபடத்தில் லெமுரியா பற்றிய குறிப்பு உண்டு . தங்க சூரியன் என்ற நிகழ்பட ஆட்டத்தில் லெமுரியா வில் ஒரு பகுதியில் ஆட்டத்தின் கதை அமைந்து இருக்கும் பொருளடக்கம் 1 அறிவியல் கூற்றுகள் 2 " பிலாவற்ஸ்கி " அம்மையாரின் இலெமூரியா 3 இலெமூரியாவும் சாஸ்ட மலைகளும் 4 குமரிகண்டமும் இலெமூரியாவும் 5 வெளி இணைப்புகள் 6 மேற்கோள்களும் ஆதாரங்களும் அறிவியல் கூற்றுகள் இன்று வாழும் இலெமூ...

குமரிக்கண்டம்

Image
குமரிக்கண்டம்   (லெமூரியா) குமரிக்கண்டம் என்பது முற்காலத்தில் இருந்ததாகக் கருதப்படும், கோட்பாடுகளால் ஊகிக்கப்படும் அல்லது இலக்கியங்களில் கற்பனையாகவோ சாட்சியாகவோ கூறப்படும் கண்டம் அல்லது பெருநிலப்பரப்பாகும். குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில்   பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர்[1] ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்:   தென்னிந்தியா, மற்றும்ஆஸ்திரேலியா ஆகியவற்ற்றை இணைக்கும்இலெமூரியாக் கண்டம். மேரு மலைஇலங்கை வரை பரந்திருந்தது. மடகாஸ்காரில...