படித்ததில் பிடித்தது ....

முகநூல் கஜினி -2 : ஜிம் பாய்ஸ்
2011 சட்ட்மன்ற தேர்தலுக்கு அப்புறம் ஆட்சி மாற்றம் ஆனது கூட தெரியாம தொடர்ந்து திமுகவையும் கலைஞரையுமே திட்டிட்டிகிட்டும் குறை சொல்லிகிட்டும் இருந்த இந்த முகநூல் கஜினிகளான நடுநிலைவாதிங்களோட சுயரூபம் பல் இளிக்க ஆரம்பிச்சிருச்சு. அதாவது இத்தன நாளா நடுநிலைங்குற போர்வையில "கஜினி பாய்ஸா" இருந்து திட்டிகிட்டு இருந்துவனுங்க எல்லாம் இப்ப "ஜிம் பாய்ஸா" மாறி முழு நேர தொழிலே அதிமுக ஜால்ராவுமாகவும், திமுக, கலைஞர் எதிர்ப்பையும் கையில எடுத்திருக்காய்ங்க.
இவனுங்களுக்கு வேலையே ஆளும் கட்சிக்கு ஆதரவா இருந்து ஜால்ரா அடிக்கிறதும், கூலிப்படை மாதிரி செயல்படுறதும் தான். அதாவது ரகுவரன், நாசர் மாதிரி பிரதான வில்லன்களா வராம பொன்னம்பலம், தளபதி தினேஷ் மாதிரி அடியாட்களா வர்றது தான் இவனுங்க பொழப்பே. திமுககாரன் அதிமுகவை பத்தி விமர்சிச்சா போதும், எப்படி முதலாளிய எவனாச்சும் எதிர்த்து பேசுனா முதலாளியயோட நாய் முந்திகிட்டு கடிக்கப் போகுமோ அது மாதிரி, அதிமுக காரன விட அதிக ரோசம் இவனுங்களுக்கு தான் பொத்துகிட்டு வரும். ஆனா இந்த ரோசத்தையும் கடமை உணர்ச்சியையும் ஆளும் கட்சிக்கும் அதோட ஜால்ரா கட்சிங்களுக்கும் தான் காட்டுவானுங்க. இவனுங்க பரப்புற அவதூறுக்கும், நக்கலுக்கும் நாம பதிலடி கொடுத்து அவனுங்க பேச முடியாம ஆயிருச்சுனா உடனே இந்த கஜினி தலையனுங்களா ஆகட்டும், தமிழ்தேசிய போலிகளாகட்டும் ஒரே பதில தான் சொல்லுவானுங்க "எங்க குடும்பமும் ஒரு காலத்துல பயங்கர திமுக தான். இப்பதான் மாறிட்டோம்."னு சொல்லுவாய்ங்க. இப்ப எய்ட்ஸ் வந்தவன் எல்லாம் ஒருகாலத்துல நல்லா இருந்தவந்தான்.. அதுக்காக?

இதெல்லாம் விடக் கொடுமை இவனுங்க பேசுற லாஜிக் இருக்கே பேரரசு படமே தோத்துரும். ஈழ விசயத்துல வைகோ, நெடுமாறனோட சுயநலத்த ஆதாரத்தோட சுப.வீ சொன்னாருன்னு எடுத்து சொன்னா, "அவரு கலைஞர் ஜால்ரா அப்படி தான் சொல்லுவாரு"ன்னு சொல்றானுங்க. ஏண்டா அப்போ உங்களுக்கு புள்ள பொறந்தவுடன தூக்கிட்டு வந்து காட்டுற நர்சு கூட உங்களுக்கு பிடிக்கலன அது உங்க புள்ள இல்லன்னு சொல்லிருவீங்களா?? என்னங்கடா உங்க நியாயம்?? எல்லாத்தையும் ஆதாரத்தோட, அந்த காலத்துல வந்த பேப்பர் செய்திகளோட புட்டுபுட்டு சொல்ற சுப.வீ கலைஞரோட ஜால்ராவா இல்ல ஒன்னுமே பண்ணாத ஜெயலலிதா ஆட்சிய போட்டி போட்டுகிட்டு பாராட்டுற சரத்குமார், தா.பாண்டி, சோனா சாமி, சூனா சாமி, வைகோ சாமி இவங்கெல்லாம் ஜால்ராவா??
திமுக ஆட்சியில எப்பவாது கலைஞர் எதாவது நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டத வச்சு இன்னைக்கு வரைக்கும் அவரு ஆட்சியில மானாட மயிலாட பாத்தாரு, மேட்சு பாத்தாருன்னு நக்கலடிக்கிறீங்களே இங்க ஒரு அம்மா ஆவூன்னா டூருக்குப் போறாங்களே அதப் பத்தி எவனாவது கேள்வி கேக்குறீங்களாடா? ஸ்கூல் பசங்களுக்கு கூட quarterly, half yearly லீவ் மட்டுந்தான். இந்தம்மாவுக்கு எப்பவுமே annual leaveஆல இருக்கு. கூடவே போயி பேனாவுல மை ஊத்தி கொடுத்த மாதிரி அங்கேயும் அலுவலக பணிகளை அம்மா பார்த்துக் கொண்டிருக்கிறார்னு சத்தமா மணி அடிக்கிறானுங்க சில பேரு.
அதவிட வேற கட்சியில இருந்து திமுகவுக்கு எவனாவது வந்தாலும் கலைஞர தான் திட்றானுங்க திமுகல இருந்து எவனாவது வெளிய போனாலும் கலைஞர தான் திட்றானுங்க ஆனா எதிர்க்கட்சியான தேமுதிகவை இப்ப பாதி பட்டா போட்டு வச்சிருக்கிற அதிமுகவையோ ஜெயலலிதாவையோ மட்டும் ஒருத்தனும் ஒன்னும் பேச மாட்டான் கேட்டா அது அரசியல் தந்திரம்னு சொல்லுவானுங்க. டேய் இதுக்கு பேசாம அதிமுகல உறுப்பினர் அட்டை வாங்கிட்டு போயி குனிஞ்சு நிக்கலாம்ல.
எனக்கு தெரிஞ்சே 15 வருசமா ஒரு வழக்கு நடந்துகிட்டு இருக்கு அதுல முக்கிய குற்றவாளியா, நூற்றுக்கணக்கா வாய்தா வாங்கி வாங்கி சொத்துக்குவிப்பு வழக்க வாய்தா குவிப்பு வழக்கா மாத்தி அந்த வழக்க விசாரிச்ச நீதிபதியே கடுப்பாகி வழக்குல இருந்து ஒதுங்குற அளவுக்கு டார்ச்சர் பண்ண ஒரு ஈழத்தாயை, காவிரித்தாயை பத்தி பேச வக்கு இல்லாத பயலுங்களும், பத்திரிக்கைகளிலும், ஊடகங்களும் 85 வயதான உடல்நிலை சரியில்லாத, வெறும் அரசு சாட்சியாக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ள தயாளு அம்மாவை கலைஞர் மனைவி என்ற ஒரே காரணத்துக்காக அட்டை படத்தில் போட்டு நக்கல் பண்ண மட்டும் தைரியம் எல்லா ஓட்டை வழியாகவும் பொங்குதே.... உங்களுக்கெல்லாம் கொஞ்சமாச்சும் வெக்கம், மானம் இருக்காடா?..அது சரி இரட்டை இலைய பறக்கும் குதிரை இறக்கைன்னு சொன்னா ஆமா போடுற கோஷ்டிங்க கிட்ட எப்படி இதெல்லாம் எதிர்பார்க்க முடியும்.
கடைசியா ஒன்னு, அது என்னங்கடா கலைஞர பத்தி எழுதும் போது மட்டும் கருணா, கருநாகம், துரோகி, அவன், இவன்னு இன்னும் என்னென்னமோ அசிங்கமா எழுதுறீங்க ஜெயலலிதாவ விமர்சிக்க மட்டும் ரொம்ப போனா பெண்மனி, அந்தம்மா, அது, இதுன்னு மட்டும் எழுதுறீங்க. கலைஞர திட்டுனா எந்த பாதிப்பும் இல்ல ஒன்னும் பண்ணமாட்டார்ன்னு தைரியம். ஜெயலலிதாவ திட்டுனா என்னவாகும்னு மனசுல பயம் இருக்குல. தைரியமா தங்கள் நிலையை அடையாளம் காட்டிக்கொள்ளாதவன் தான் நடுநிலை போர்வையோட ராப்பிச்சைக்காரன் மாதிரி சுத்துவான்.அதுக்காக திமுக பண்றது எல்லாம் சரி அதுனால அவங்கள மட்டும் தான் ஆதரிக்கனும்னு சொல்லல, திமுகவை விமர்சிக்கிறதுல பத்து விழுக்காடாவது ஆளும் கட்சியை விமர்சிக்க தைரியம் இருக்கான்னுதான் கேக்குறேன். இருந்தா கேளுங்க. இல்லெனா... மூடிட்டு........

--------------------------------------------------------------------------------------------------------------- ------------------ ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2..) ஓரம் போ... ட்ராஃபிக் கலாட்டா..!!

சமீபத்துல யாரோ சொன்னதை ஒரு நாளிதழ்ல படிச்சது,"ஒரு ஊருல மக்கள் எந்த அளவு பக்குவப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அவர்கள் சாலையில் எப்படி வண்டி ஓட்டுகிறார்கள் என்பதை வைத்தே புரிந்துகொள்ளலாம்". அவரு சொன்னது சரியா தப்பான்னு தெரியல,ஆனா கண்டிப்பா சரியா இருக்கக் கூடாது இருந்துச்சுன்னா நம்ம ஊரு மாதிரி மட்டமான ஊரு உலகத்துலையே இருக்காது.ஏன்னா நம்ம ஊருல நெறைய பேருக்கு வண்டி எப்படி ஓட்டுறதுன்னு தெரியும்,ஆனா எப்படி வண்டிய ஒட்டுறதுன்னு தெரியாது.அதாவது accelerator கொடுத்தா ஓடும்,பிரெக் போட்டா நிக்கும்ங்குறத மட்டும் கத்துக்கிட்டாலே வண்டி ஓட்ட ஆரம்பிச்சிருவாங்க. ரோட்டுல முக்கால்வாசி பேருக்கு வண்டி ஓட்டும் போது கொடுக்குற சிக்னல் எதுவுமே புரியாது.இன்னும் பல பேரு வண்டியில இண்டிகேட்டர்ன்னு ஒன்னு இருக்குறதே வெறும் அலங்காரத்துக்குன்னு மட்டும் தான் நெனச்சிருக்காங்க. ஒரு தடவ நானும் நண்பனும் வண்டியில போகும் போது அவன் ஓட்டிட்டு இருந்தான், இடது பக்கம் திரும்பும்போது மட்டும் கை சிக்னலோ, இண்டிகேட்டரோ போடாம படக் படக்குனு திருப்புனான் நான்,"ஏண்டா வலது பக்கம் போறப்போ மட்டும் சிக்னல் தர, இடது பக்கம் போறப்போ சிக்னல் தர மாட்டேங்குற"ன்னு கேட்டேன்,அதுக்கு அவன் "மச்சி நமக்கு keep left தான அதுனால இடது பக்கம் போனா எப்பவுமே சிக்னல் தர வேணாம்டா"என்றான்.
நான்,"டேய் என்னடா நீயா ஒரு ரூல்ஸ் போடுற??அப்படியெல்லாம் கிடையாதுடா,பின்னாடி வரவனுக்கு நீ எந்த பக்கம் போறன்னு எப்படிடா தெரியும் அதுக்குதான்டா சிக்னல்.சரி அப்புறம் எதுக்குடா வண்டியில left இண்டிகேட்டர் வச்சிருகாய்ங்க,அத சொல்லு".அவன் பதிலே சொல்ல.இப்படி இவய்ங்களா எதாச்சும் மனசுல கற்பனைய வளத்துகிட்டு ஒரு பழக்கத்த ஃபாலோ பண்றாய்ங்க.அதே மாதிரி சிட்டிக்குள்ள வண்டி ஓட்டும் போதும் ஹெட்லைட்ட" "ஹை-பீம்"ல வச்சு தான் வண்டி ஓட்றாங்க,எதிர்ல வர்ற வண்டி ஓட்றவங்களுக்கு கண் கூசுமேங்குற எண்ணமே இருக்காது, நாம கேட்டோம்னா,"நீயாடா எனக்கு கரெண்ட் பில்லு கட்டுற, என் லைட்ட நான் எப்படி வேணாலும் போடுவேன்னு அகராதி பேசுறாய்ங்க.
இதெல்லாம் விட கொடுமை சிக்னல்ல நிக்கிறப்போ தான் நடக்கும். முக்கியமா பாலத்துல இடது பக்கம் போகவேண்டியவன் வலது பக்கம் நிப்பான்,நேரா போக வேண்டியவன் இடது பக்கமா நிப்பான்.இதுல அடிச்சு புடிச்சு நாம் வெளிய வர்றதுக்குள்ள அடுத்த சிக்னல் விழுந்துரும்.இதுல உச்சக்கட்ட கொடுமை என்னனா சிக்னல்ல நமக்கு ஃப்ரீ லெப்ட் போட்ருக்கும் ஆனா நேரா போறவன் வலது பக்கம் போறவனெல்லாம் இடது பக்கம் வழிய மறிச்சு நிப்பாய்ங்க,என்னதான் அந்த இடத்துல நீங்க தலைகீழா தண்ணீ குடிச்சாலும் நகரவே மாட்டாய்ங்க.அவனுங்க போனாதான் நாமளும் போனும்,அப்படியொரு நல்ல எண்ணம். இப்பெல்லாம்.எலெக்ட்ரானிக் டைமர் சிக்னல் வேறயா நம்ம ஆளுங்க கிட்ட கேக்கவே வேணாம்.மதுரையில 5 செகண்ட் பாக்கி இருக்கும் போதே வண்டிய கிளப்புறாங்கன்னா,சென்னையில குறஞ்சது 8 செகண்ட்லையே எடுத்துறாய்ங்க.தப்பித் தவறி 1,0 ஆகுற வரைக்கும் நின்னோம்னா செத்தோம்.ஒன்னு ஹார்ன் அடிச்சே சாவடிப்பாய்ங்க இல்லைனா அசிங்கமா அர்ச்சனை ஆரம்பிச்சிருவாய்ங்க. இந்த அனுபவம் எனக்கு நெறையா இருக்கு. சிக்னல்ல ஹார்ன் அடிக்கிறத கூட ஏத்துக்கலாம். அது ஏண்டா 'டோல் கேட்'ல நிக்கும் போது கூட அடிக்கிறீங்க??
கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி சொல்லுவாங்க சென்னைல மட்டும் வண்டி ஓட்டிட்டா தமிழ்நாட்டுல எங்க வேணாலும் ஓட்டலாம்னு, ஆனா இப்போ சென்னையில கூட வண்டி ஓட்டிறலாம்,பாலமெல்லாம் கட்டி பெருமளவு போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்திருக்காங்க. அதே நிலமை இப்பொ மதுரையில வந்திருக்கு. அதுலையும் மதுரையில இப்பெல்லாம் வண்டியெடுதுட்டு வெளிய போயிட்டு பத்திரமா வீடு வந்து சேந்துட்டோம்னா முன் ஜென்ம புண்ணியம் தான். அத வச்சு ஒரு நாள் என் நண்பன் கிட்ட சொன்னேன், "மச்சி முன்னாடி தான் சென்னைல ஓட்டுறது கஷ்டம்,இப்பொ மதுரையில ஓட்டிட்டேன்னா எங்க வேணா ஓட்டலாம்டா", அவன்,"என்னடா இப்படி சொல்ற எங்க ஊருல நம்ம திருப்பூர்ல ஓட்டிட்டா எங்க வேணாலும் ஓட்டலாம்னு சொல்லுவாங்கடா",என்றான். அடப்பாவிங்களா அப்போ எல்லா ஊருலையும் இதே நிலமைதானா??(இதுல நமக்கு ஒரு பெருமை). அதுவும் நம்ம ஊரு ட்ராபிக்ல பீக் டைம்ல பாத்தோம்ன கூலாங்கல் குவியலுக்குள்ள தண்ணிய ஊத்துன மாதிரி நுழஞ்ச நுழஞ்சு போவாய்ங்க. அதவிட கொடுமை எதாவது ஒரு இடத்துல இடைஞ்சல் ஆயிருச்சுன்னா பின்னாடி நின்னு சரியானவுடன போவோம்ங்குற எண்ணமே இருக்காது, அப்படியே பக்கவாட்டுல போயி போயி முன்னாடி நின்னு 'டூ வே'(two way) ரோட 'ஒன் வே' (one way) மாதிரி ஆக்கிருவாய்ங்க. இப்போ அவனும் போக முடியாது நாமளும் போக முடியாது.
ஆக்சிடெண்ட் இப்பெல்லாம் சர்வ சாதாரணாமா ஆயிருச்சு. ஒரு காலத்துல மண், தண்ணி லாரி,பிரைவேட் பஸ் இவங்க தான் அந்த நல்ல காரியத்துல அதிகமா ஈடுபட்டாங்க (இப்பவும்தான்) ஆனா இப்ப இவங்களுக்கு டஃப் பைட் (tough fight) கொடுக்குறதுக்குனே வந்திருக்கிறது தான் நம்ம "பங்கு ஆட்டோ" அதான் 'ஷேர் ஆட்டோ'. ரோட்டுல வண்டி ஓட்டும் போது என்னவெல்லாம் பண்ணக்கூடாதோ அதையெல்லாம் கொஞ்சம் கூட தப்பாம கரெக்ட்டா பண்ணுவாய்ங்க. கொஞ்சம் இதயம் பலவீனமா உள்ள ஆளா மட்டும் இருந்தாங்கன்னா இந்த ஷேர் ஆட்டோ காரய்ங்க வண்டி ஓட்டுறத ஒரு 10 நிமிஷம் நின்னு பாத்தா போதும், மூணு அட்டாக் ஒன்னா வந்துரும். zooவுல குரங்கு இங்குட்டும் அங்கிட்டும் தாவுற மாதிரி ரோட்டுல எந்தப்பக்கம் இருந்தாலும் கை காட்டுனீங்கன்னா போதும் அடுத்த மைக்ரோ செகண்ட்ல அங்க இருப்பாய்ங்க.ரோட்டுல எவன் போறான் எவன் வர்றான்னு கண்டுக்கவே மாட்டாய்ங்க கருமமே கண்ணா இருப்பாங்க,கருமம்.ஷேர் ஆட்டோல பெரும்பாலும் முன்னாடி கண்டக்டர் மாதிரி ஒரு ஆளு உக்காந்திருப்பாரு.நானும் ரொம்ப நாளு வண்டிக்கு கண்டக்டர் அல்லது கிளீனரா இருப்பாரோன்னு நெனச்சேன் அப்புறம் தான் தெரிஞ்சது,அடுத்த கொஞ்ச நாள்ல அவரே ட்ரைவர் ஆக போறாரு அதுக்கான தொழில் நுனுக்கங்கள அப்சர்வ் பண்ண தான் முன்னாடி உக்காந்திருக்காருன்னு. சத்திய சோதனை!! ஒருத்தன் ஓட்டுறதையே தாங்க முடியல இதுல அவன் ட்ரெயினிங்ல வந்தவன் மட்டும் எப்படி இருப்பான்.
டூவீலர்ல அதுவும் இப்போ இந்த 'ஆக்டிவா'வச்சிருக்காங்க பாருங்க அதுல சில பேரு இந்த விசயத்துல ஒரே மாதிரி தான் இருக்காங்க சர்ர்ர்ர்னு...பறக்குறது. .நாம மொத கியர் போட்டு எடுக்குறதுக்குள்ள அடுத்த சிக்னல் போயிர்றாங்க. ஒட்டுறதும் அப்படியே வளைச்சு வளைச்சு என்னமோ சர்கஸ் காட்டிட்டே போவாய்ங்க. பைக் ஒட்றவங்ககிட்ட இந்த ஹெல்மெட் படுற பாடு இருக்கே..யப்பா..தலைய தவிர எல்லா எடத்துலையும் மாட்டி வச்சிருக்காய்ங்க. அதைவிட முன்னாடி எல்லாம் வேடிக்கை பாத்துட்டு வண்டி ஓட்டுனானுங்க, செல்ஃபோன் பேசிட்டே வண்டி ஓட்டுனானுங்க இப்ப அடுத்தக் கட்டமா மெசேஜ் அனுப்புகிட்டே வண்டி ஓட்டுறானுங்க.. டெத் ரேட்டை(death rate) எப்படியெல்லாம் இன்கிரீஸ்(increase) பண்றதுன்னு நம்ம ஆளுங்ககிட்ட தான் கத்துக்கனும்..


சரி இவங்கதான் இப்படின்னு பாத்தா நடந்து போறவனுங்க தொல்லை இருக்கே..தாங்கல.. எதாவது திருவிழா,பண்டிகை சமயம்னா கேக்கவே வேணாம் ஜாலியா நடுரோட்டுல ராஜா மாதிரி உலா வருவாங்க. இன்னும் சில பேரு நடந்த போறவனுங்க என்னமோ ரஜினி மாதிரி வானத்தை பாத்துட்டு யோசிச்சிட்டே நடக்குறாய்ங்க..அட எருமை மாடு கூட ஹார்ன் அடிச்சா நகருது இவனுங்க அசையவே மாட்டேங்குறாய்ங்க..நின்னு நிதானமா திரும்பி பாத்து வண்டி மாடல், கலர், ஃபேன்சி நம்பரா இல்லையான்னு எல்லாம் பாத்துட்டுதான் நகராலாம வேணாமன்னு முடிவெடுப்பானுங்க.இன்னும் கொஞ்ச நாள்ல மாடு இவனுங்கல பாத்து, "டேய் மாடு அதான் ஹார்ன் அடிக்கிறாருல நடு ரோட்டுல திரியிற ஒதுங்கிப் போ"ன்னு சொல்லப்போவுது அப்போதான் திருந்த போறாய்ங்க.
மொத்தத்துல இன்னைக்கு நிலமையில நாம மட்டும் சரியா வண்டி ஓட்டுனா பத்தாது,எதிர்ல தப்பா ஒட்றவனுக்கும் சேர்த்து நாம அட்ஜெஸ்ட் பண்ணிதான் ஓட்டனும். அதுனால முடிஞ்சளவு நம்ம பாதுகாப்ப அதிகபடுத்திக்கனும். இதையெல்லாம் மனசுல வச்சு கவனமா வண்டி ஓட்டுனா தினமும் நாம பத்திரமா வீடு திரும்புவோம்னு எதிர்பார்த்து வீட்ல காத்துடு இருக்கவங்களுக்கு என்னைக்குமே எந்த ஏமாற்றமுமே இருக்காது.
நன்றி ;; கேடி பில்லா ..
Comments