Posts

Showing posts from 2015

அசோகர் (The King Ashoka)

Image
வரலாற்றின் கரும்புள்ளிகள்   மறைக்கப் பட்ட உண்மைகள் - அசோகர் - வரலாறு என்பது எப்போதுமே கடந்த காலத்தின் முழு பிரதிபலிப்பாக மட்டுமே இருக்க வேண்டும் , அது மிகவும் சரியானதுமாகவும் , தெளிவாகவும் இருக்க வேண்டும் . ஆனால் பல வேலைகளில் அது எழுதுபவர்களின் திறமைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது . அதற்க்கு மாபெரும் சான்று அசோகர் என்றால் யாராவது நம்புவீர்களா ? அசோகர் என்றால் நமக்கு என்னென்ன தெரியும் ? சிறிது ஞாபகப்படுத்துங்களேன் . அசோகர் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது கலிங்கப் போர் தான் . இந்தியாவின் மிகச்சிறந்த , பெரிய பேரரசர் . பிறகு அவர் தனது தமையனை போரில் வென்று பட்டம் சூட்டிக் கொண்டார் , கலிங்கப் போருக்குப் பிறகு அவர் போரினை துறந்து புத்த மதத்தைத் தழுவி அற வழியில் சென்றுவிட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது . பிறகு அவர் மக்களுக்கு பயன்பட சாலைகள் அமைத்தார் , இருபுறங்களிலும் நிழல் தரும் மரங்கள் நட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது , ஆனால் அசொகருக்கென்று ஒரு கரிய சரித்திரம் உள்ளது . அது திட்டமிட்...

சாளுக்கியர்களின் பேரரசு

Image
சாளுக்கியர்களின்  பேரரசு இராஷ்டிரகூடர் இராஷ்டிரகூடர் ( கன்னடம் ) கிபி 6 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட அரச மரபினர் ஆவர் . 7 ஆம் நூற்றாண்டில் கிடைத்த நிலக் கொடை குறித்த செம்பு தகடே அவர்களின் ஆட்சியில் நமக்கு கிடைத்த முதல் ஆவணமாகும் . இது மத்தியப்பிரதேசத்தின் மால்வா பகுதியில் உள்ள மான்பூர் என்னும் இடத்தில் கிடைத்தது . அச்சல்பூர் ( தற்கால மராட்டியத்தின் எலிச்சப்பூர் ) கனோஞ் அரசர் பற்றியும் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன . இராஷ்டிரகூடர்கள் எங்கிருந்து வந்தார்கள் அவர்கள் மொழி என்ன என்று பல சர்ச்சைகள் உள்ளது . எலிச்சப்பூர் அரசு பாதமியை தலைநகராகக் கொண்டு ஆண்ட சாளுக்கியர்களின் பாதுகாப்பில் இருந்த ஒன்றாகும் . அப்போது எலிச்சிப்பூரை ஆண்டது தந்திதுர்கா ஆவார் . அவர் சாளுக்கியன் இரண்டாம் கீர்த்திவர்மனை முறியடித்து தற்கால கர்நாடகவிலுள்ள குல்பர்கா பகுதியில் பேரரசை நிறுவினார் . அவரின் மரபில் வந்தவர்கள் மன்யக்கேடா இராஷ்டிரகூடர்கள் எனப்பட்டனர் . தென் இந்தியாவில் சக்திமிக்க அரசாக கிபி 753 இல் உருவாகினர் . அதே சமயத்தில் வங்காளத்தின் பாலப் பேரரசும் மால்வாவின் பிரதிதாரா பேரரச...