Posts

Showing posts from 2012

பண்டைய இந்தியாவில் ஏழு சாதிப்பிரிவுகள்

Image
(  161 × 218 - He left an account of his travels titled  INDICA) மெகஸ்தனீஸ். பேரைக் கேட்ட உடனே 'இது எங்கேயோ கேள்விப் பட்ட ஒரு பெயர் போல இருக்கின்றதே' என்ற எண்ணம் நம்மில் பலருக்கு வரத் தான் செய்யும். காரணம் நாம் பள்ளியில் பயின்ற நமது வரலாற்றுப் புத்தகங்களில் இவரை நாம் கடந்து தான் வந்து இருப்போம். சரி அப்பொழுது கண்ட இம்மனிதரை நாம் இப்பொழுது மீண்டும் காண வேண்டியத் தேவை என்ன....? காண்போம். வரலாற்றின் பக்கங்கள் என்றுமே மர்மமான ஒன்றாகத் தான் இருந்து இருக்கின்றன. காரணம் இன்று இருப்பது போன்று அன்று வரலாற்றினை சேகரித்து வைக்க விடயங்கள் பல இருக்க வில்லை. மேலும் அவ்வாறு சேகரித்து வைத்த விடயங்களும் பல போர்களாலும் இயற்கையாலும் காலம் தோறும் அழிக்கப்பட்டே வந்து இருக்கின்றன. இந்நிலையில் மிஞ்சி இருக்கும் நூல்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள் போன்றியவற்றினை வைத்தே நம்முடைய இன்றைய வரலாறு கணிக்கப்பட்டு இருக்கின்றது. இவ்வாறு கணிக்கப்பட்டு இருக்கும் வரலாற்றில் மிக முக்கிய பங்கினை ஆற்றியோர் பயணிகளும் வணிகர்களும் தான். இவர்கள் தான் தாங்கள் செல்லும் ஒவ்வொரு ஊரினைப் ப...

ஆபிரகாம் லிங்கன்

Image
மனித இனத்திலேயே ஒருவர் மற்றொருவரை அடிமையாக நடத்துகின்ற போக்கு, மனித இனம் தோன்றிய காலத்திலேயே தொடங்கிவிட்டது.பணம், பதவி, நிறம், இனம், மொழி ஆகியவற்றைக் கொண்டு மனிதர்கள் பிரிவதும், பேதம் காணுவதும், அதன் மூலம் கலவரங்கள் மூள்வதும் இன்றும் நடந்து வருகிறது. அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடியவர்கள் உலகில் பலருண்டு. அவர்களில் தலைசிறந்தவர் ஆபிரகாம் லிங்கன்.ஏழ்மைக் குடும்பத்தில் 1809 பிப்ரவரி 12-ல் ஆபிரகாம் லிங்கன் பிறந்தார்.சிறுவனாக இருந்த போது, தந்தையின் பணிகளில் லிங்கன் உதவி புரிந்தார். காடுகளுக்கிடையே ஒன்பது மைல் நடந்து சென்று கல்வி பயின்றார் லிங்கன். அப்போது அவருக்கு வயது ஒன்பது.சிறுவயதிலயே தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார்.பிறருக்கு உதவி செய்தால், அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல் போன்ற அரிய குணங்கள் சிறு வயதிலேயே லிங்கனிடம் இருந்தது.எப்போதும் கலகலப்பாகப் பழகுதல்; கதை சொல்லுதல்; வேடிக்கையாப் பேசுதல் ஆகிய லிங்கனின் குணங்கள் அவர் மீது மற்றவர்களை விருப்பம் கொள்ளச் செய்தன. ஒருமுறை, நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு லிங்கன்...

தமிழர் பண்பாட்டின் அடையாளம் பொங்கல் திருநாள்!

Image
உலகெங்கும் வாழும் தமிழர்களால் தை முதல் தேதியன்று கொண்டாடப்படுவது பொங்கல். மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படும்   பொங்கல் விழா தைப்பொங்கல். தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு    தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள்,       வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும்  கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்களால் தை முதல் தேதியன்று கொண்டாடப்படுவது பொங்கல். பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம். தை முதல் தேதியன்றே தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என்று மூத்த தமிழ்ச் சான்றோர்களின் வாக்கினைப் பின்பற்றி, தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கடைபிடிப்பது என்று தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. "பொங்க...

M. R. Radha

Image
In this  Indian name , the name  Madras Rajagopal  is a  patronymic , not a  family name , and the person should be referred to by the  given name ,  MR Radha . Madras Rajagopala Radhakrishnan Naidu Portrait of M. R. Radha Born April 14, 1907 Chennai ,  Tamil Nadu ,  India Died September 17, 1979 (aged 72) Tiruchirappalli ,  Tamil Nadu ,  India Other names Nadiga vel Occupation Actor Religion Atheist Madras Rajagopala Radhakrishnan Naidu  (b. 14 April 1907 - 17 September 1979), popularly known by his stage name,  M. R. Radha  was an Indian  film actor and politician. He was given the title of "Nadigavel" for his acting prowess. After a successful career on stage in his early years, he acted in films from the 1930s to the 1970s, and then, giving up films, he went back to his first love - Stage. [ edit ] Career Radha left his home at an early age due to a quarrel with his mother t...

புத்தர்

Image
புத்தர் (கி.மு.563-கி.மு.483) இளவரசர் சித்தார்த்தர் எனும் இயற்பெயருடைய கௌதம் புத்தர் பெரும் சமயங்களுள் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவியவராவார். சித்தார்த்தர் வடகிழக்கு இந்தியாவில் நேப்பாள எல்லையின் அருகிலுள்ள கபில வஸ்து எனும் நகரை ஆண்டு வந்த மன்னரின் மைந்தர் (கௌதம குடும்பத்தையும் சாக்கிய குலத்தையும் சேர்ந்த) சித்தார்த்தர் இன்றைய நேப்பாள எல்லைக்குள்ளிருக்கும் லும்பினியில் கி.மு. 563 இல் பிறந்ததாகக் கூறப்படுகின்றது. அவர் தமது 16 ஆம் வயதில் ஒத்த வயதுள்ள உறவினளைத் திருமணம் செய்து கொண்டார். செல்வம் கொழிக்கும் அரண்மனையில் பிறந்த சித்தார்த்தர் இளவரசருக்கு இன்ப நலன்களுக்குக் குறைவில்லை. ஆயினும் அவர் ஆழ்ந்த அதிருப்தியடைந்திருந்தார். மனிதருள் பலர் ஏழையாக இருப்பதையும், தொடர்ந்து வறுமையில் துன்புறுவதையும், எல்லோரும் நோயுற்று இறுதியில் இறப்பதையும் கண்டார். மறைந்து போகும் இன்பங்களை விட மேலானாதொன்று வாழ்க்கையில் உண்டென்றும், அவற்றை எல்லாம் துன்பமும் இறப்பும் விரைவில் அழித்தொழிக்கும் என்றும் சித்தார்த்தர் கருதினார். கௌதமர் தமது 29 ஆம் வயதில் தம் மூத்த மகன் பிறந்ததும் தாம் வாழ்ந்து வந்த வாழ்கையை...

அலெக்சாண்டர் கிரகாம் பெல்

Image
அலெக்சாண்டர் கிரகாம் பெல் (1847-1922) தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல், ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரோவில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு மட்டுமே முறையான பள்ளிக் கல்வி கற்றபோதிலும், இவருடைய குடும்பத்தினர் இவருக்குச் சிறந்த கல்வி கற்பித்தனர். இவர் தாமாகவும் உயர்ந்த கல்வி கற்றுக் கொண்டார். இவருடைய தந்தை, குரல் உறுப்புப் பயிற்சியிலும், பேச்சுத் திருத்த முறையிலும், செவிடர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும் ஒரு வல்லுநராகத் திகழ்ந்தார். எனவே, குரல் ஒலிகளை மீண்டும் உருவாக்கிக் காட்டுவதில் இவருக்கு இயல்பாகவே ஆர்வம் எழுந்தது. அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் மாநிலத்திலிருக்கும் பாஸ்டன் நகரில் 1871 ஆம் ஆண்டில் பெல் குடியேறினார். அங்குதான் 1875 ஆம் ஆண்டில், தொலைபேசியைக் கண்டு பிடிப்பதற்கு வழி வகுத்த கண்டுபிடிப்புகளை இவர் செய்தார். இவர் தமது கண்டுபிடிப்புக்காக 1876 ஆம் ஆண்டு பிப்பரவரி7 மாதத்தில் புத்தாக்க உரிமைக்காக விண்ணப்பித்தார். சில வாரங்களுக்குப் பிறகு இந்த உரிமை இவருக்கு வழங்கப்பட்டது. (பெல் தமது விண்ணப்பத்தை அளித்த அதே நாளன்று ஆனால் சில மணி நேரம் பிந்தி, எல...

ஆய்வுச் சிந்தனைகள்

தொல்காப்பியக் காலப் பெண்கள் நிலை தமிழரின் தோன்மை நூலாக விளங்கும் தொல்காப்பியம் எழுத்திற்கு சொல்லிற்கு மட்டுமல்ல அதில் எழுந்த இலக்கியத்திற்கும் (பொருளதிகாரம்) இலக்கணம் படைத்து உலகிற்கு வழிகாட்டிய பெருமை உண்டு. இலக்கியங்கள் உருவாவதற்கு எழுந்த பொருளிலக்கணம் அன்றைய சமூகப் பின் புலத்தையும் பெருமளவு இனங்காட்டுகிறது. குறிப்பாக பெண்களின் நிலை குறித்து குறிப்பிடத்தக்க அளவு அறிய முடிகிறது. பெண்கள் என்பவள் சிறந்த பண்புடன் விளங்க வேண்டும் என்பதைத் தொல்காப்பியம் கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்  மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் என்ன கிழவோள் மாண்புகள் (தொல். 1098) என்று வரையற்றுள்ளது. ஆரம்ப காலங்களில் ஆணுக்கு நிகராகப் பெண்களும் செயல்பட்டனர். ஆனால் இயற்கையாக உடல் ரீதியான மாற்றங்களில் ஆண் பெண் ஆகிய இருவருக்குமான தொழில் வேறுபட்டன. வினையே ஆடவர்க்கு உயிர் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என்ற நிலை உருவானது முந்நீர் வழக்கம் மகடூஉ வொடு இல்லை என்பதால் கடல் கடந்து செல்வது பெண்ணுக்குத் தடை செய்யப்பட்டது. செய்து வந்திருக்கின்றன. வா...

ஐரோப்பியரகளிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்

Image
                           Europe                                                 americane நம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் கொண்டு செல்வது சகஜம். கேரளத்தில் இதை யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள். ஆனால், அதே போல் தமிழகத்தில் பெண்கள் உடை அணிய முடியாது. அது போல் தான் ஒவ்வொரு கலாச்சாரமும். இது நாட்டிற்கு நாடு பெரும் அளவில் மாறு படுகிறது. இதை நான் கூறுவதற்கு காரணம்,ஐரோப்பா....  அமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள் என்று தான் கூறியுள்ளேனே தவிர அவர்கள் அவ்வாறு செய்வது தவறு என நான் கூற வரவில்லை. # எல்லாவற்றிலும் டீசன்சி பார்க்கும்ஐரோப்பா......  அமெரிக்கர்கள் சளி பிடித்தால் மட்டும் கையில் உள்ள நாப்கின்னை வைத்துக் கொண்டு எங்கு இருந்தாலும் அதை பற்றி கவலைப் படாமல் அதுவும் சத்த...

ஒரு தமிழனின் புலம்பல்...

Image
புரட்சித்தலைவி டாக்டர் அம்மா, முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர்  ஐயா,  கருப்பு எம்ஜியார் காப்டன் விஜயகாந்த். இப்படி அரசியல் தலைவர்களை மட்டுமல்ல.  நம் நாட்டை பிரிட்டிஷ்காரர்கள் விட்டு சென்றாலும் அவர்கள்  விட்டு சென்ற  ஆண்டான் அடிமைத்தனம் மட்டும் இன்றும் பல இடங்களில் நம்மை விட்டு விலகவில்லை. பள்ளியில்  ஆரம்பித்து ஒரு பதவியில் சேர்ந்த பிறகும் கூட அது எல்லா மட்டத்திலும் நம்மை விட்டு நீங்காமல்  நம்முடன்  நீக்கமற  நிறைத்திருக்கிறது.    ஒரு கலெக்டருக்கு பின்னால் எதற்கு ஒரு டவாலி? அதுவும் நம் நாட்டிற்கு  சற்றும்  பொருத்தமிலாத ஒரு உடையை அணிந்துகொண்டு. ஜனநாயக  நாடு  என்றால் அனைவரும்  சமம். நம்மிடம் அது இருக்கிறதா? அமெரிக்காவின் அதிபரையே அதிபர் மாளிகையில் சுத்தம் செய்யும் ஒரு சாதாரணமான வேலைகாரர்  Hello Mr. President என கூப்பிட முடியும். அதே போல் அதிபராகவே  இருந்தாலும் அந்த வேலைக்காரரை தாண்டி செல்ல வேண்டுமானால்  'Excuse  me' என்று தான் கூறவேண்டும்.  சற்றே நினைத்து பாருங்கள்.   ஜெயலலி...